இரவில் ஏசி-யில் தூங்குபவரா நீங்கள்? உஷாராகுங்கள்!
இரவில் ஏசி-யில் தூங்குபவரா நீங்கள்? உஷாராகுங்கள்!
கோடைக்கால வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்று பலரது வீடுகளிலும் இரவு நேரங்களில் ஏசி (Air Conditioner) இல்லாமல் தூங்கவே முடிவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
பகல் முழுவதும் வியர்வையில் நனைந்துவிட்டு, இரவில் குளு குளு ஏசி காற்றில் தூங்குவது சுகமாக இருந்தாலும், அது நம் உடலுக்குள் சில சைலண்ட் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரவு முழுவதும் ஏசி காற்றில் தூங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் உடலில் தோன்றும் இந்த 3 முக்கிய அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள். அவை உங்கள் ஆரோக்கியம் கெடுவதற்கான ரெட் சிக்னல்!
1. காலையில் எழும்போது தொண்டை வலி மற்றும் வறண்ட இருமல்; ஏசி மெஷின்கள் அறையில் இருக்கும் வெப்பத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள ஈரப்பதத்தையும் (Humidity) முழுமையாக உறிஞ்சிவிடுகின்றன. இதனால், இரவு முழுவதும் வறண்ட காற்றையே நாம் சுவாசிக்க வேண்டியுள்ளது.
காலையில் எழுந்தவுடன் தொண்டையில் ஒருவித வறட்சி, வலி அல்லது தொடர் இருமல் இருந்தால், ஏசியின் உலர் காற்று உங்கள் சுவாசப்பாதையைத் தாக்கியுள்ளது என்று அர்த்தம்.
2. அதிகாலையில் ஏற்படும் கடுமையான தலைவலி; பலரும் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடித்தால் தலைவலி சரியாகிவிடும் என்று நினைப்பார்கள். ஆனால், ஏசி அறையில் நீண்ட நேரம் தூங்குவதால் உடலில் 'டீஹைட்ரேஷன்' எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வறட்சியடைவதால் தான் இந்த அதிகாலை தலைவலி ஏற்படுகிறது. இது தொடர்ந்தால் சைனஸ் (Sinus) மற்றும் மைக்ரேன் தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.
3. சரும வறட்சி மற்றும் மூட்டு வலி; இயற்கையான காற்றோட்டம் இல்லாமல், ஏசியின் செயற்கைக் குளிர்ச்சியிலேயே தொடர்ந்து இருக்கும்போது, தோலில் உள்ள ஈரப்பதம் மறைந்து சருமம் சுருக்கமடையத் தொடங்கும். அதேபோல், ஏசியின் குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படும்போது, தசைகள் இறுக்கமடைந்து அதிகாலையில் எழுந்திருக்கும்போது கை, கால் மற்றும் மூட்டுகளில் கடுமையான பிடிப்பு அல்லது வலியை ஏற்படுத்தும்.
தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?; டைமர் (Timer) செட் செய்யுங்கள்: இரவு முழுவதும் ஏசியை ஓடவிடாமல், தூங்கச் சென்ற 2 அல்லது 3 மணி நேரத்திற்குப் பின் தானாகவே ஆஃப் ஆகும்படி டைமர் செட் செய்வது நல்லது.
ஒரு வாளி தண்ணீர்: ஏசி இயங்கும் அறையின் ஒரு மூலையில், ஒரு சிறிய வாளி அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வையுங்கள். இது அறையின் ஈரப்பதம் முழுமையாகக் குறைவதைத் தடுத்து, தொண்டை வறட்சியைப் போக்கும்.
வெப்பநிலை (Temperature): ஏசியின் வெப்பநிலையை எப்போதுமே 24 டிகிரி முதல் 26 டிகிரி செல்சியஸிற்குள் பராமரிப்பதே உடலுக்குப் பாதுகாப்பானது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
1
Angry
0
Sad
0
Wow
1